Wednesday, April 20, 2011

ராட்சஸக் கரையாக மாறும் ராமேஸ்வரம்!


'உலகக் கோப்பையை இந்தியா​விடம் இழந்த ஆத்திரத்தில், தமிழக மீனவர்​கள் நால்வரின் உயிரைப் பறித்து​விட்டது இலங்கைக் கடற்​படை!’ என்று எழுந்த குற்றச்சாட்டு குறித்து, கடந்த 17.4.11 இதழில் எழுதி இருந்தோம். விக்டஸ் என்ற மீனவர் உடல் மட்டும் இலங்கையில் கரை ஒதுங்கிய நிலையில், மற்ற மீனவர்களின் உடல்கள் குறித்து எந்தத் தகவலும் கிடைக்காமல் இருந்தது. இந்த நிலையில் கடந்த 12-ம் தேதி அந்தோணிராஜ் உடலும், 14-ம் தேதி கை துண்டிக்கப்பட்ட நிலையில் ஜான்பால் உடலும் கிடைத்தன. இரண்டு நாட்கள் கழித்து தலை துண்டிக்கப்பட்ட நிலையில் மாரிமுத்து உடலும் தொண்டி கடலோரப் பகுதியில் கரை ஒதுங்கியது. அதாவது கொன்று, கொண்டுவந்து போட்டுள்ளார்கள். சூடு குறையாத நேரத்தில் பாதிக்கப்பட்ட மீனவர் குடும்பங்களை சந்தித்து ஆறுதல் கூற தங்கச்சிமடம் வந்திருந்தார் வைகோ. 

முதலில் விக்டஸின் வீட்டுக்குச் சென்றார். விக்டஸின் மனைவி கிங்ஸ்டாவும், அவரது மூன்று வயது மகள் பெரிலும் கதறி அழ, வைகோவின் கண்களிலும் கண்ணீர்.


\''உயிரைப் பணயம் வைத்து உழைத்தாலும், அதன் மூலம் கிடைக்கும் கஞ்சியைக்கூட நிம்மதியாகக் குடிக்க முடியாத நிலையில் நம் மீனவர்கள் உள்ளனர். நாம் எவ்வளவுதான் போராட்டம் நடத்தி​னாலும், நம் மீனவர்களை சிங்களன் கொன்றுகொண்டே இருக்கிறான். உங்களுடைய துக்கத்திலும் கண்ணீரிலும் பங்கெடுக்கவேவந்து இருக்கிறேன். நீங்கள் தைரியமாக இருக்க வேண்டும். வேலைக்குப் போன அப்பா திரும்பி வருவார் என நினைத்துக்கொண்டு இருக்கும் இந்தக் குழந்தையினை நன்றாகப் படிக்கவையுங்கள். உங்களுக்கு ஏற்பட்ட இழப்பை யாராலும் ஈடுகட்ட முடியாது. ஆனாலும் என்னால் முடிந்த சிறு உதவி'' என சொல்லி 25 ஆயிரத்தை விக்டஸின் மகளிடம் கொடுத்தார்.

அடுத்து ஜான்பால் வீட்டுக்குச் சென்றார் வைகோ. ஜான்பாலுக்கு நான்கு குழந்தைகள் அடுத்தடுத்த ஆண்டுகளில் பிறந்துள்ளன. யாருமே இன்னும் ஐந்து வயதை எட்டவில்லை. எதுவுமே அறியாத அந்தக் குழந்தைகள் சூழல் புரியாமல் அப்பாவுக்கு காரியங்களைச் செய்துகொண்டு இருப்பதைக் கண்ட வைகோ கண்கள் சிவக்க, அந்தக் குழந்தைகளைத் தூக்கி அணைத்து கண்ணீர் விட்டார். இந்த நெகிழ்வு அங்கு கூடியிருந்த பெண்களையும் தொற்றிவிட, அனைவரும் வாய்விட்டு அழுதனர். ஜான்பாலின் மனைவி ஜெனிட்டாவுக்கு ஆறுதல் கூறிய வைகோ, அவரிடமும் நிதி அளித்தார்.

இறுதியாக அந்தோணிராஜ் வீட்டுக்குச் சென்ற வைகோவிடம் சகாயம் என்ற பெண், ''காலங்காலமா கடலை நம்பியே வாழுற எங்க புள்ளைங்களோட கதியைப் பாத்தீங்களா? இலங்கைக்காரன் கொன்னு போட்ட நாலு பேரோட குடும்பத்தைப் பாருங்க. புருஷனைப் பறிகொடுத்துட்டு நிக்கிற எங்க புள்ளைகளைப் பாருங்க அய்யா. இந்த கொடுமைக்கு எப்பத்தான் முடிவு வருமோ...'' என்று கதறினார். 19 வயதில் கணவனை இழந்த சோகத்தையும், தனது இரண்டு வயது மகள் ரிமிலாவின் எதிர்காலத்தையும் நினைத்துச் சுருண்டுகிடந்த அந்தோணிராஜின் மனைவி சாலியோவிடம், 'காலம்தான் உன் கண்ணீரைத் துடைக்கும்’ என்ற வைகோ, அவருக்கும் 25 ஆயிரத்தை வழங்கினார். அப்போது, ''சாலியோ ப்ளஸ் டூ படிச்சிருக்கு. அவ​ளுக்கு டீச்சர் டிரெய்னிங் படிக்க ஏற்பாடு செஞ்சா, அவ வாழ்க்கைக்கு உதவியா இருக்கும்’ என சிலர் சொன்னார்கள். உடனடியாக அதனை ஏற்றுக்கொண்ட வைகோ, 'இப்போதே அதற்கு ஏற்பாடு செய்கிறேன்’ என்று, டீச்சர் டிரெய்னிங் ஸீட் வாங்குவதற்கான நன்கொடை, படிப்புச் செலவு அனைத்தையும் தானே ஏற்றுக்கொள்வதாக அறிவித்தார், வைகோ.

கண் கலங்கி நின்ற வைகோ, ''நம் மீனவர்கள் தாக்கப்படும்போது எல்லாம், இந்திய பிரதமரின் கவனத்துக்கு நேரடியாகவும், கடிதம் மூலமும் கொண்டுசெல்வேன். அவரும், இனி அப்படி நடக்காது என பதில் அளிப்பார். ஆனால் மறு நாளே, நம் மீனவர்கள் சிங்களர்களால் தாக்கப்​படுவார்கள். 30 வருடங்களாக இந்தத் தாக்குதல் நடந்துகொண்டே இருக்கின்றன. இலங்கை அரசைக் கண்டித்தோ, ராஜ்ய உறவுகளைத் துண்டிப்போம் என்றோ இந்திய அரசு எச்சரித்தது இல்லை. மாறாக ராஜபக்ஷேவை காமன் வெல்த் போட்டிக்கும், கிரிக்கெட் போட்டிக்கும் அழைத்து மரியாதை செய்கிறார்கள். திருப்பதியில் பூரண கும்ப மரியாதை கொடுக்கிறார்கள். ராஜபக்ஷே இந்தியாவில் இருந்த அன்றைய இரவில்தான், இந்தக் கொடூர சம்பவம் நடந்து இருக்கிறது. இந்திய அரசு... தமிழர்களுக்கும், தமிழக மீனவர்களுக்கும் துரோகம் இழைத்து வருகிறது...'' என்று கொந்தளித்தார்.

இதுவே, இறுதி நிகழ்வாக இருக்கட்டும்!

இரா.மோகன், படங்கள்: உ.பாண்டி

நன்றி: ஜூனியர் விகடன்

Tuesday, April 19, 2011

இலங்கைத் தமிழர்களுக்காக தமிழ்நாட்டு இளைஞரொருவர் தீக்குளித்து தற்கொலை

இலங்கைத் தமிழர்களுக்கு நடக்கும் அநீதிகளைப் பொறுத்துக் கொள்ள இயலாமல் தமிழ்நாட்டு வாலிபரொருவர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

தமிழ்நாட்டின் நெல்லை மாவட்டத்திலுள்ள சீகம்பட்டி பிரதேசத்தைச் சோ்ந்த 25 வயது வாலிபரான கிருஷ்ணமூர்த்தி எனும் பொறியியலாளர் ஒருவரே அவ்வாறு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

தற்கொலை செய்து கொள்வதற்கு முன் அவர் எழுதி வைத்துள்ள கடிதத்தில் ஈழத் தமிழ் மக்களுக்குத்  தொடர்ச்சியாக நடக்கும் அநீதிகளைப் பொறுத்துக்கொள்ள முடியாமல் தற்கொலை செய்து கொள்ள முடிவெடுத்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

அதன் பின் அவர் தன் உடம்பில் பெற்றோலை ஊற்றி தீமூட்டிக் கொண்டு வீதி வழியாக ஓடிச்  சென்ற போது அவரது பெற்றோர் பின்னாலேயே ஒடிச் சென்று தீயை அணைக்க முயன்றுள்ளனர். முடியாமற் போன பின்பு தீக்காயங்களுடன் அவரை மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றுள்ளனர்.
ஆயினும் சிகிச்சை பலனின்றி கிருஷ்ணமூர்த்தி பரிதாபகரமாக மரணத்தைத் தழுவிக் கொண்டுள்ளார்.

ஈழத் தமிழர் படுகொலைகள் குறித்த ஐநா அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்த நெஞ்சை உலுக்கும் கொடூரங்கள் மற்றும் ஈழத்தில் இன்னும் தமிழர்களுக்கு எதிராகத் தொடரும் கொடுமைகளால் மனம் வெதும்பி இளம் பொறியாளர் கிருஷ்ணமூர்த்தி (25) தீக்குளித்து மரணமடைந்தார்.

நெஞ்சைப் பதற வைக்கும் இந்த கொடிய சோகம் நேற்று இரவு நடந்துள்ளது. நெல்லை மாவட்டம் சங்கரன் கோயில் அருகே உள்ளது சீகம்பட்டி கிராமம். இங்குள்ள ராமசுப்பு என்பவரின் மகன் கிருஷ்ணமூர்த்தி (25). பிஇ பட்டப்படிப்பு முடித்து ராஜஸ்தானில் எஞ்ஜினீயராகப் பணியாற்றி வந்தார்.

விடுமுறையில் ஊருக்கு வந்திருந்தார் இந்த இளைஞர். சிறு வயதிலிருந்தே, ஈழத் தமிழர் விவகாரங்களில் பெரும் அக்கறை காட்டி வந்தாராம். இந்த நிலையில் ராஜஸ்தானில் இவருக்கு எஞ்ஜினீயர் பணி கிடைத்ததும் அங்கு போய்விட்டார்.

விடுமுறையில் ஊருக்குத் திரும்பிய கிருஷ்ணமூர்த்தி, தொடர்ந்து ஈழப் பிரச்சினை குறித்தும், அங்கு இப்போது தொடரும் கொடுமைகள் குறித்தும் நண்பர்களுடன் பேசி வந்துள்ளார். ஆனால் பெற்றோரிடம் எதுவும் சொல்வில்லையாம்.

இந்த நிலையில் நேற்று முன்தினம், இலங்கையில் நடந்த தமிழர் படுகொலைகள் குறித்த ஐநா அறிக்கை வெளியானது. அதில் தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகள், ராஜபக்சே அரசு நடத்திய கொலைவெறி தாக்குதல்களைப் படித்து கலங்கிப்போய்விட்டாராம்.

தீக்குளிப்பு
நேற்று அதிகாலை 5 மணி அளவில், தான் ஏற்கனவே வாங்கி வைத்திருந்த ஒவ்வொரு லிட்டராக 3 லிட்டர் பெட்ரோலை, தன் மீது ஊற்றி கொளுத்திக் கொண்டு ஓடினார். அப்போது அவரது தாய், தந்தை மற்றும் சிலர் அவரை காப்பாற்ற முயற்சி செய்தனர்.

ஆனாலும் தன்னுடைய வேதனையை வெளிக்காட்டிக் கொள்ளாத கிருஷ்ணமூர்த்தி, இலங்கையில் தமிழர்களை கொலை செய்துவிட்டார்கள். பச்சிளம் குழந்தை என்றும் பாராமல் ராஜபக்சே அரசு கொன்றுவிட்டான். இனி நான் இருந்து என்ன பயன். அதனால் நான் தீக்குளிக்கிறேன். அந்த ராஜபக்சேவை தூக்கில் போடுங்கள்... என்று கதறியபடி கிருஷ்ணமூர்த்தி மயங்கி விழுந்தார்.

உடனே கிருஷ்ணமூர்த்தியை, தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டும், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.

கிருஷ்ணமூர்த்தி தான் கைப்பட எழுதிய கடிதம், அவரது குடும்பத்தாரிடம் கிடைத்தது.

அந்தக் கடிதம்:
அன்று ராவணன் செய்த கொடுமையான செயல்களை இன்று சிங்களவர்கள் செய்து விட்டார்கள். அவர்களுக்கும் இப்படி ஒரு நிலை ஏற்பட்டால் என்ன ஆகும் என்று நினைத்துப் பார்த்திருக்க வேண்டும். இலங்கையில் சிங்களவர்களின் இனவெறி தாக்குதலால் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு அதற்குரிய பலனை பெற்றுத் தர வேண்டும். இலங்கை தமிழர்கள் அனைவரையும் ஒன்றிணைத்து அவர்களுக்கு தனி நாடு என்ற சிறப்பை பெற்றுத் தர வேண்டும்.

அதுவரை தமிழகத்தில் ஆட்சி பொறுப்பேற்கக் கூடாது. அப்படி பொறுப்பேற்றால், தயவு செய்து விஷ்ணுவின் பிறப்பு என்று சொல்லிக்கொள்ளும் கோயில்கள் அனைத்தையும் மூடிவிடுங்கள். இந்திய ஆட்சியாளர்கள்தான் இன்றைய சூர்ப்பனகை.

இலங்கை தமிழர்களுக்காக போராடிய போராட்டத்தில் முத்துக்குமாரே சிறந்தவர். இலங்கை தமிழர்களுக்காக போராட மீண்டும் என் ஆஞ்சநேயரை அழைக்கிறேன்.

அப்பா, அம்மா, சீனி, தினகரன் என்னை மன்னித்துவிடுங்கள். எனக்கு பிறவியில் கொடுக்கப்பட்ட தொழில் இதுதான். இதை நான் செய்யாவிட்டாலும், மிகப்பெரிய குற்றவாளி நான்தான்," இவ்வாறு கிருஷ்ணமூர்த்தி தனது கடிதத்தில் எழுதியுள்ளார்.

வைகோ நேரில் அஞ்சலி
இந்த தகவல் சென்னையில் உள்ள மதிமுக பொதுச்செயலாளர் வைகோவுக்கு தெரிவிக்கப்படவே, பத்திரிக்கையாளர்களை அழைத்துக்கொண்டு இரவோடு இரவாக கலிங்கப்பட்டி கிராமத்துக்கு வந்த அவர், சீகம்பட்டி கிராமத்துக்கு 19.04.2011 அன்று காலை 9 மணிக்கு வந்தார்.

கிருஷ்ணமூர்த்தியின் உருவப்படத்தை பார்த்தத வைகோ கண்கலங்கினார். உருவப்படத்துக்கு மாலை அணிவித்துவிட்டு, மவுன அஞ்சலி செலுத்தினார்.

அப்போது பேசிய வைகோ, "தென்மாவட்டத்தின் கடைக்கோடி கிராமத்தில் உள்ள இந்த கிருஷ்ணமூர்த்தியின் தியாகம் வெளியே தெரியாமல் இருந்துவிடக் கூடாது. தமிழர்களுக்கு தனி நாடு வேண்டும் என்கிற கிருஷ்ணமூர்த்தியின் உயிர் தியாகத்தின் மூலம் நிறைவேற்றப்பட வேண்டும்.

ஐநா சபையால் போர்க் குற்றவாளி என்று அறிவிக்கப்பட்ட ராஜபக்சே தண்டிக்கப்பட வேண்டும். அதற்காவது இந்தியா உதவ வேண்டும். இல்லையென்றால் இந்தியாவும் குற்றவாளிதான் என்று நான் பகிரங்கமாக குற்றம் சாட்டுவேன்," என்றார்.

மேலும் பேசிய வைகோ, "இளைஞர்களே போராடுங்கள், ஆனால் தயவுசெய்து உங்களின் உயிர்களை தியாகம் செய்ய வேண்டாம். கிருஷ்ணமுர்த்தியின் குடும்பத்திற்கு அண்ணன் பழ.நெடுமாறன் மற்றும் அமைப்புகளோடு கலந்து ஆலோசித்து உரிய நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுப்பேன்," என்றார்.

nanri: தமிழ்வின்

Friday, April 15, 2011

மீனவர்கள் உயிர்பலிக்கு மத்திய அரசே பொறுப்பு: வைகோ ஆவேசம்



ராமேஸ்வரம்: ""இலங்கை கடற்படையினரால் கொல்லப்பட்ட தமிழக மீனவர்கள் நான்கு பேரின் உயிர்பலிக்கு மத்திய அரசே பொறுப்பேற்க வேண்டும் ,''என, ம.தி.மு.க.,பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்தார்.

ராமேஸ்வரத்திலிருந்து கடந்த 2ல் மீன்பிடிக்க சென்று படகுடன் காணாமல் போன நான்கு மீனவர்களில் விக்டஸ் உடல் இலங்கை கடற்கரை, ஜான்பால், அந்தோணிராஜ் உடல்கள் தொண்டி கடற்கரையில் ஒதுங்கின. இவர்களுடன் சென்ற மீனவர் மாரிமுத்துவின் உடல் மட்டும் கிடைக்கவில்லை. பலியான மீனவர்கள் வீட்டிற்கு வந்த ம.தி.மு.க., பொதுச்செயலாளர் வைகோ , உறவினர்களிடம் ஆறுதல் கூறினார். மீனவர்களின் குடும்பத்திற்கு கட்சி நிதியிலிருந்து தலா 25 ஆயிரம் ரூபாய் வழங்கிய அவர்,""அந்தோணிராஜ் மனைவி சாலியாவை ஆசிரியர் பயிற்சி பள்ளியில் சேர்வதற்கான செலவை தானே ஏற்று கொள்வதாக ,'' தெரிவித்தார். மாநில மீனவர் அணி செயலாளர் நக்கீரன், இளைஞர் அணி துணை செயலாளர் கார்கண்ணன், மண்டபம் ஒன்றிய செயலாளர் பேட்ரிக், மாவட்ட செயலாளர்கள் ஜெயராமன்(ராமநாதபுரம்) சண்முக சுந்தரம்(விருதுநகர்) செவந்தியப்பன் (சிவகங்கை) பூமிநாதன் (மதுரை) சந்திரன்(தேனி) மற்றும் நிர்வாகிகள் உடன் வந்தனர்.

தொடர்ந்து நிருபர்களிடம் வைகோ கூறியதாவது: மீனவர்கள் பலியான சம்பவம் நடந்த ஏப்.2 ல் இரவில், மீன்பிடித்த மீனவர்களிடம்," கிரிக்கெட்டில் இலங்கை தோற்றால் நடப்பதே வேறு ,' என, இலங்கை கடற்படையினர் மிரட்டியுள்ளனர். அன்று இரவுதான் நான்கு மீனவர்களும் காணாமல் போனர். இவர்களை இலங்கை கடற்படையினர்தான் கொலை செய்து கடலில் வீசி உள்ளனர். தமிழக மீனவர்களுக்கு நடுக்கடலில் நடக்கும் கொடுமையான உயிரிழப்புகளை தடுக்க ,மத்திய அரசு எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இலங்கை கடற்படையினரின் தாக்குதல் குறித்து, இலங்கை அரசுக்கு மத்திய அரசு எவ்வித எச்சரிக்கையும் செய்யவில்லை. யாழ்பாணத்தில் மீட்கப்பட்ட மீனவர் விக்டசின் உடலில் 16 இடங்களில் காயம் இருந்ததாக அடையாளம் காண சென்ற உறவினர்கள் தெரிவிக்கின்றனர். மீட்கப்பட்ட மீனவர்களின் ஒருவருக்கு ஒரு கை வெட்டப்பட்டிருப்பதாகவும் கூறுகின்றனர். இதிலிருந்தே நால்வரையும் இலங்கை கடற்படையினர் கொலைசெய்துள்ளது உறுதியாகிறது. இதற்கு மத்திய அரசுதான் பொறுப்பேற்க வேண்டும். இந்நிலை நீடித்தால்,"" இந்திய அரசு எங்கள் அரசு இல்லை'' என, தமிழக மக்கள் கூறும் நிலை உருவாகும் , என்றார்.

நரிக்குடி: நரிக்குடி அருகே ஒட்டங்குளத்தை சேர்ந்தவர் மாரிமுத்து. இவர் ராமேஸ்வரத்தில் மீன் பிடிக்கும் தொழில் செய்கிறார். கடந்த வாரம் ராமேஸ்வரம் கடலில் மீன் பிடிக்க சென்ற நான்கு மீனவர்கள் காணாமல் போயினர். இவர்களில் மூன்று பேரின் உடல் கிடைத்தது. மாரிமுத்து என்ன ஆனார் என்று தெரியவில்லை. இவரது குடும்பத்திற்கு ம.தி.மு.க., செயலாளர் வைகோ நேரில் ஆறுதல் கூறி ரூ.25 ஆயிரம் வழங்கினார். விருதுநகர் மாவட்ட ம.தி.மு.க., செயலாளர் சண்முகசுந்தரம், ஒன்றிய செயலாளர் அன்பழகன், கட்சி நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

நன்றி..தினமலர்

Monday, April 11, 2011

ஸ்டெர்லைட்.. தர்மயுத்தம் தொடரும்: வைகோ



சென்னை, ஏப்.8,2011

பொதும‌க்க‌ள் நலனை‌ப் பாதுகா‌க்க, ஸ்டெ‌‌ர்லை‌ட் ந‌ச்சு ஆலையை அக‌ற்று‌ம் போரா‌ட்ட‌த்தை‌த் த‌ர்மயு‌த்தமாகவே தொட‌ர்வோ‌ம் எ‌ன்று ம‌திமுக பொது‌ச் செயல‌ர் வைகோ கூ‌றியு‌ள்ளா‌ர்.

இது தொட‌ர்பாக அவ‌ர் இ‌ன்று வெ‌ளி‌யி‌ட்டு‌ள்ள ‌அ‌றி‌க்கை‌யி‌ல், "தூ‌த்து‌க்குடி நகர‌‌த்தை அடு‌த்து ‌ஸ்டெ‌ர்லை‌ட் ‌நிறுவன‌ம் அமை‌த்து உ‌ள் நாசகார ந‌ச்சு ஆலையான தா‌மிர உரு‌க்கு ஆலை ‌நில‌ம், ‌நீ‌ர், கா‌ற்று அனை‌த்தையு‌ம் ந‌ச்சு‌த்த‌ன்மை உடையதா‌க்‌கி, ‌விவசா‌யிக‌ள், ‌‌மீனவ‌ர்க‌ள், பொதும‌க்க‌ள் அனைவ‌ரி‌ன் வா‌ழ்‌வையு‌ம் பாழா‌க்‌கி, உ‌யிரு‌க்கே ஊறு ‌விளை‌வி‌க்கு‌ம் நோ‌ய்களையு‌ம் ஏ‌ற்படு‌த்துவதோடு, வேளா‌ண் ‌விவசாய ‌நில‌‌ங்களையு‌ம் பா‌ழ்படு‌த்‌தி கட‌ல்வா‌ழ் உ‌யி‌ரின‌ங்களு‌க்கு‌ம் பெரு‌ங்கேடு ‌விளை‌வி‌க்கு‌ம் எ‌ன்பதா‌ல் இ‌ந்த ஆலை அக‌ற்ற‌ப்பட வே‌‌ண்டு‌ம் எ‌ன்று கட‌ந்த 15 ஆ‌ண்டுகளாக ம‌.தி.மு.க போராடி வரு‌கிறது.

‌ஸ்டெ‌ர்லை‌ட் ஆலையை ‌நிர‌ந்தரமாக அக‌ற்றுவத‌ற்கு ‌ரி‌ட் மனுவை செ‌ன்னை உய‌ர் ‌‌நீ‌திம‌ன்ற‌த்த‌ி‌ல் தா‌க்க‌ல் செ‌ய்து நானே வாதாடினே‌ன். கட‌ந்த செ‌ப்‌ட‌‌ம்ப‌ர் 28ஆ‌ம் தே‌திய‌ன்று ‌ஸ்டெ‌ர்லை‌ட் ஆலையை ‌நிர‌ந்தரமாக மூட உய‌ர் ‌நீ‌திம‌ன்ற‌ம் ஆணை ‌பிற‌ப்‌பி‌‌த்தது. அதை எ‌தி‌ர்‌த்து ‌ஸ்டெ‌ர்லை‌ட் ‌நி‌ர்வாக‌ம் உ‌ச்ச ‌நீ‌திம‌ன்ற‌த்‌தி‌ல் வழ‌க்கு‌த் தொடு‌த்து த‌ற்கா‌லிகமாக தடை ஆணையு‌ம் பெ‌ற்றது. அதை எ‌தி‌ர்‌த்து உ‌ச்ச ‌‌நீ‌திம‌ன்ற‌த்‌தி‌ல் நானே வழ‌க்கு தொடு‌த்து வாதாடினே‌ன்.

இ‌ந்‌நிலை‌யி‌ல், உ‌ச்ச ‌நீ‌திம‌ன்ற‌‌ம் ‌ஸ்டெ‌ர்லை‌ட் ஆலையா‌ல் சு‌ற்று‌‌ச்சூழ‌ல் எ‌ந்த அள‌வில‌் பா‌தி‌க்க‌ப்படு‌கிறது எ‌ன்பதை ஆ‌ய்வு செ‌ய்து அ‌றி‌க்கை தரு‌ம்படி நா‌க்பூ‌ரி‌ல் உ‌ள்ள ம‌த்‌திய அர‌சி‌ன் தே‌சிய சு‌ற்று‌ச்சூழ‌ல், பொ‌றி‌யிய‌ல் ஆரா‌ய்‌ச்‌சி ‌நிறுவன‌த்‌தி‌ற்கு (‌நீ‌ரி) உ‌த்தர‌வி‌ட்டது. வழ‌க்கு தொடு‌த்தவ‌ன் எ‌ன்ற முறை‌யி‌ல் நானு‌ம் ம‌த்‌திய அர‌சி‌ன் மாசுக‌ட்டு‌ப்பா‌ட்டு வா‌ரியமு‌ம், த‌மி‌ழ்நா‌ட்டி‌ன் மாசு க‌ட்டு‌ப்பா‌ட்டு வா‌ரியமு‌ம் ப‌ங்கே‌ற்கு‌ம் ‌வி‌த‌த்‌தி‌ல் ஆ‌ய்வு நட‌த்த‌ப்பட வ‌ே‌ண்டு‌ம் எ‌ன்று‌ம், 8 வார கால‌த்‌திற‌்கு‌ள் உ‌ச்ச ‌நீ‌திம‌ன்ற‌த்த‌ி‌ல் அ‌ந்த ஆ‌ய்வு அ‌றி‌க்கை தர‌ப்பட வே‌ண்டு‌ம் எ‌னவு‌ம், கட‌ந்த ‌பி‌ப்ரவ‌ரி 25ஆ‌‌ம் தே‌தி உ‌ச்ச ‌நீ‌திம‌ன்ற‌ம் ஆணை ‌பிற‌ப்‌பி‌‌த்தது.

ஆனா‌ல் உ‌ச்ச ‌நீ‌திம‌ன்ற‌ம் உ‌த்தரவு ‌பிற‌ப்‌பி‌த்த 40வது நா‌ளி‌ல்தா‌ன் ‌நீ‌ரி ‌நிறுவன‌ம் ஆ‌‌ய்வு நட‌த்த ஏ‌‌ப்ர‌ல் 6ஆ‌ம் தே‌திய‌ன்று வருகை த‌ந்தது. ‌நீ‌ரி‌யி‌ன் சா‌ர்‌பி‌ல் டி.ந‌ந்‌தி தலைமை‌யி‌ல், டி.‌ஜி.கா‌ஜ்கா‌ட்டே, ஏ.எ‌ன்.வை‌த்யா, ஏ.டி.பனா‌ர்‌க்க‌ர், எ‌ம்.‌பி.பா‌ட்டீ‌ல், கா‌ர்‌த்‌தி‌க், ஆ‌ர்.‌‌சிவகுமா‌ர் ஆ‌கிய ஏழு பே‌ர் கொ‌ண்ட ‌நிபுண‌ர் குழு ஆ‌ய்‌வினை மே‌ற்கொ‌ண்டன‌‌ர். ‌நிபுண‌ர் குழு‌வினரு‌ம், ‌ம‌த்‌திய, மா‌நில மாசு க‌ட்டு‌ப்பா‌ட்டு அ‌திகா‌ரிகளு‌ம் 6ஆ‌ம் தே‌தி ‌ஸ்டெ‌ர்லை‌ட் ஆலை‌யி‌ன் ஆ‌ய்‌வினை‌த் தொட‌ங்க மு‌னை‌ந்தன‌ர்.

இ‌ந்த ஆ‌ய்‌வி‌ல் ப‌ங்கே‌ற்க‌ச் செ‌‌ன்ற எ‌ன்னை ம‌ட்டு‌ம் அனும‌தி‌க்க வே‌ண்டு‌ம் எ‌ன்று‌ம், எ‌ன்னுட‌ன் வேறு யாரையு‌‌ம் அனும‌தி‌க்க‌க் கூடாது எ‌ன்று‌ம் ‌ஸ்டெ‌ர்லை‌ட் ‌நி‌ர்வாக‌ம் கடுமையாக வாதாடியது. உ‌ச்ச ‌நீ‌திம‌ன்ற‌த்‌தி‌‌ல் வாதாடு‌ம்போதே உத‌வி செ‌ய்வத‌ற்கு வழ‌க்க‌றிஞ‌ர்க‌ள் உட‌ன் இரு‌ப்பதை‌ப் போல, இ‌ந்த ஆ‌ய்‌வி‌ல் என‌க்கு உதவுவத‌ற்காக எ‌ன்னுட‌ன் 4 பேரை அனும‌தி‌க்க வே‌ண்‌டு‌ம் எ‌ன்று ‌நீ‌ரி ‌நிபுண‌ர் குழு‌வின‌ரிட‌ம் நா‌ன் வ‌ற்புறு‌த்‌திய‌தி‌ன்பே‌ரி‌ல் சு‌ற்று‌ச்சூழ‌ல் ‌நிபுணரான ‌நி‌த்‌தியான‌ந்த‌ன் ஜெயரா‌‌மு‌ம், ம.‌தி.மு.க. ச‌ட்ட‌த்துறை செயல‌ர் வழ‌க்க‌றிஞ‌ர் தேவதா‌‌ஸ், தராசு மகாராச‌ன், ஜா‌க்ச‌ன் தாம‌ஸ் ஆ‌கியோ‌ர் ஆ‌‌ய்‌வி‌ன்போது உட‌ன் இரு‌க்க அனும‌தி‌க்க‌ப்ப‌ட்டன‌ர்.

இ‌ந்த ஆ‌ய்‌வி‌ன்போது ‌‌ஸ்டெ‌ர்லை‌ட் வளாக‌த்த‌ி‌லு‌ம், சு‌ற்று வ‌ட்டார‌த்‌திலு‌ம், ‌நில‌த்‌தி‌ன் ‌மீது‌ம், ‌நில‌த்‌தி‌ன் அடி‌யி‌லு‌ம் உ‌ள்ள ‌நீரையோ, ம‌ண்ணையோ சோ‌தி‌ப்பத‌‌ற்கு மா‌தி‌‌ரிகளை எடு‌க்க‌ப் போவ‌தி‌ல்லை எ‌ன்று‌ம், இ‌‌னி ஒருமுறை வ‌ந்துதா‌ன் சோதனை‌க்கு மா‌தி‌ரிக‌ள் எடு‌க்க‌ப்படு‌‌ம் எ‌ன்று ‌நீ‌ரி ‌நிபுண‌ர் குழு தெ‌ரி‌வி‌த்தபோது நா‌ன் கடுமையாக ஆ‌ட்சே‌பி‌த்தே‌ன். உ‌ச்ச ‌நீ‌திம‌ன்ற‌ம் அ‌றி‌வி‌த்த 10 நா‌ட்களு‌க்கு‌ள் ‌நீ‌ங்க‌ள் வ‌ந்து இரு‌க்க வே‌ண்டு‌ம். ஆனா‌ல், 40 நா‌‌ள் க‌ழி‌த்து வ‌ந்து இரு‌க்‌கி‌றீ‌ர்க‌ள். இத‌ற்கு‌ள் ஸ்டெ‌ர்லை‌ட் ‌நிறுவன‌ம் ப‌ல்வேறு ஏமா‌ற்று வேலைகளை இ‌ங்கே செ‌ய்து இரு‌க்‌‌கி‌ன்றது.

மேலு‌ம் பல உ‌ண்மைகளை மூடி மறை‌க்க ஸ்டெ‌ர்லை‌ட் ‌நி‌ர்வாக‌த்‌திற‌்கு வா‌ய்‌ப்பு அ‌ளி‌க்க ‌நீ‌ங்க‌ள் முய‌ல்‌கி‌றீ‌ர்கள‌். எனவே, வெறு‌ம் க‌ண்துடை‌ப்பு‌க்காக நட‌த்த‌ப்படு‌ம் இ‌ந்த ஆ‌ய்‌வி‌‌ல் நா‌ன் கல‌ந்து கொ‌ள்ள மா‌ட்டே‌ன். இதனை உ‌ச்ச ‌நீ‌திம‌ன்றத‌்‌திலும‌் த‌ெ‌ரி‌‌வி‌ப்பே‌ன் என‌க் கூ‌றினே‌ன். இத‌‌ன் ‌பி‌ன் ‌‌நீ‌ரி ‌நிபுண‌ர் குழு ‌நீரையு‌ம், ம‌ண்ணையு‌ம் சோதனை‌க்கு மா‌தி‌‌ரி எடு‌‌க்க ஒ‌ப்பு‌க் கொ‌ண்டது. ஆனா‌ல் ஸ்டெ‌ர்லை‌ட் ‌நிறுவன‌த்‌தி‌ற்கு‌ள் ‌நீரையு‌ம், ம‌ண்ணையு‌ம் சோ‌தி‌ப்பத‌ற்கு ந‌ா‌ங்களு‌ம் மா‌தி‌ரிக‌ள் எடு‌க்க வ‌ே‌ண்டு‌ம் எ‌ன்றபோது ஸ்டெ‌ர்லை‌ட் ‌நி‌ர்வாக‌ம் அடியோடு மறு‌த்ததா‌ல் ‌நீ‌ரி ‌நிபுண‌ர் குழு எ‌ங்களை அனும‌தி‌க்க‌வி‌ல்லை.

கா‌ற்று ம‌ண்டல‌ம் மாசுபடுவதை‌ச் சோ‌தி‌க்கு‌ம் உபகர‌ண‌ங்களையு‌ம் கொ‌ண்டு வர‌வி‌ல்லை. நா‌ங்க‌ள் ஏ‌ற்பாடு செ‌ய்ய‌வி‌ல்லை எ‌ன்று‌ம், அடு‌த்தமுறை வரு‌ம்போது அத‌ற்கு ஏ‌ற்பாடு செ‌ய்ய‌ப்படு‌ம் எ‌ன்று‌ம்‌‌ ‌நிபுண‌ர் குழு‌வின‌ர் சொ‌ன்னா‌ர்க‌ள். ஆனா‌ல், உ‌ண்மை‌யி‌ல் கா‌ற்‌றி‌ல் கல‌க்கு‌ம் ந‌ச்சு‌த்த‌ன்மையை‌க் க‌ண்டு அ‌றியு‌ம் உபகர‌ண‌ங்க‌ள் ‌ஸ்டெ‌ர்லை‌ட் ‌நிறுவன‌த்‌தி‌ற்கு‌ள் ஒரு வாகன‌த்த‌ி‌ல் கொ‌ண்டு வர‌ப்ப‌ட்டு இரு‌ந்தது. பக‌ல் 12 ம‌ணியள‌வி‌ல் அ‌ந்த வாகன‌ம் வெ‌ளி‌யி‌‌ல் அனு‌ப்ப‌‌ப்ப‌ட்டு‌வி‌ட்டது.

நெரு‌ப்பாக‌க் ‌த‌கி‌க்கு‌ம் வெ‌‌யி‌லி‌ல் பக‌ல் 12 ம‌ணி‌க்கு ஆ‌ய்வு தொட‌‌ங்‌கியது. ‌ஸ்டெ‌ர்லை‌ட் தொ‌ழி‌ற்சாலைக‌்கு‌ள் ‌பிற‌்பக‌ல் 3 ம‌ணி‌ வரை ஆ‌ய்வு நட‌த்த‌ப்ப‌ட்டது. ‌பி‌ன்ன‌ர் 4 ம‌ணி‌க்கு ஆ‌ய்வு ‌‌மீ‌ண்டு‌ம் தொட‌ங்‌‌கியது. ஸ்டெ‌ர்லை‌ட் ஆலை‌‌க்கு வெ‌ளி‌யி‌ல் உ‌ள்ள இட‌ங்களான தெ‌ற்கு ‌வீரபா‌ண்டியாபுர‌ம், ‌மீள‌வி‌ட்‌டா‌ன், ‌சி‌ல்வ‌ர்புர‌ம் ஆ‌கிய பகு‌திக‌ளி‌ல் ‌நில‌த்தடி ‌நீரு‌ம், ‌கிண‌ற்கு ‌நீரு‌ம் ஆ‌ய்வு‌க்கு‌ச் சோனை‌க் குடுவைக‌ளி‌ல் சே‌க‌ரி‌க்க‌ப்ப‌ட்டது.

ஸ்டெ‌ர்லை‌ட் ந‌ச்சு ஆலையா‌ல் பா‌தி‌க்க‌ப்ப‌ட்ட ‌விவசா‌யிக‌ள், ‌மீனவ‌ர்க‌ள் த‌ங்க‌ள் தர‌ப்பு கரு‌த்துகளை‌க் கூற ஸ்டெ‌ர்லை‌ட் ஆலை‌யி‌ன் வாசலுக‌்கு எ‌திரே கா‌த்து இரு‌ப்பதாகவு‌ம், அவ‌ர்களையு‌ம் ச‌ந்‌தி‌க்க வே‌‌ண்டு‌ம் என நா‌ன் வ‌ற்புறு‌த்‌திய‌தி‌ன்பே‌ரி‌ல் 7ஆ‌ம் தே‌தி காலை 10 ம‌ணி‌க்கு ச‌ந்‌தி‌ப்பதாக ‌நிபுண‌ர் குழு தெ‌ரி‌‌வி‌த்து இரு‌ந்தது. 7ஆ‌‌ம் தே‌‌தி காலை‌யி‌ல் 9.50 ம‌ணி‌க்கு பேரா‌சி‌ரியை பா‌த்‌திமா பாபு தலைமை‌யி‌ல் ‌விவசா‌யிக‌ளு‌ம், ‌மீனவ‌ர்களு‌ம், ‌கிராம‌த்து‌த் தா‌‌ய்மா‌ர்களு‌ம் ‌திர‌ண்டு இரு‌ந்தன‌ர். ஆனா‌ல் 11.15 ம‌ணி வரை‌யிலு‌ம் ‌நீ‌ரி ‌நிபுண‌ர் குழு அ‌ங்கு வர‌வி‌ல்லை. இத‌ற்கு இடை‌யி‌ல் ஸ்டெ‌ர்லை‌ட் ‌நி‌ர்வாக‌ம் த‌ங்களு‌க்கு ஆதரவாக‌க் கரு‌த்துகளை‌க் கூற, ஆலை‌யி‌ல் வேலை பா‌ர்‌க்‌கிற நப‌ர்களை கொ‌ண்டு ‌சில ஆ‌ட்களை ஏ‌ற்பாடு செ‌ய்து இ‌ரு‌ந்தது.

அவ‌ர்களு‌ம் ஆலை‌யி‌ன் வாசலு‌க்கு எ‌தி‌ர்புர‌‌ம் ஒரு ஓரமாக ‌நி‌ன்று இரு‌ந்தா‌ர்க‌ள். 11.15 ‌ம‌ணி‌க்கு வருகை த‌ந்த ‌நீ‌ரி ‌நிபுண‌ர் குழு தலைவ‌ர் ந‌‌ந்‌தி ‌கி‌ல்ப‌ர்‌ன் கெ‌மி‌க்க‌ல் ஆலை‌யிலு‌ம், ரமே‌ஷ் ‌பிளவ‌ர் ஆலை‌யிலு‌ம் ஆ‌‌ய்வு செ‌ய்து ‌வி‌ட்டு ‌வ‌ந்ததாகவு‌ம் அதனா‌ல் காலதாமத‌ம் ஏ‌ற்ப‌ட்டதாகவு‌ம் கூ‌றினா‌ர். ஸ்டெ‌ர்லை‌ட் ‌நிறுவன‌த்‌தி‌ல் ஆ‌ய்வு நட‌த்த உ‌ச்ச ‌நீ‌திம‌ன்ற‌ம் ஆணை ‌பிற‌ப்‌பி‌‌த்து இரு‌க்‌கிறது. ஆனா‌ல், இ‌ந்த இர‌ண்டு இட‌ங்க‌ளிலு‌ம் ஆ‌ய்வு நட‌த்துவதை என‌க்கு ஏ‌ன் ‌நீ‌ங்க‌ள் தகவ‌ல் தெ‌ரி‌வி‌‌க்க‌வி‌ல்லை எ‌ன்று கே‌ட்டத‌ற்கு அவ‌ர்க‌ள் உ‌ரிய ‌விள‌க்க‌ம் தராம‌ல் வரு‌த்த‌ம் தெ‌ரி‌வி‌த்தன‌ர்.

‌பி‌ன்ன‌ர் ஸ்டெ‌ர்லை‌ட் ‌நிறுவன‌த்‌தி‌ன் மு‌ன் ‌நி‌ன்ற ம‌க்க‌‌ளிட‌ம் கரு‌‌த்து‌க் கே‌‌ட்குமாறு நா‌ன் கூ‌றியதை ஏ‌ற்று‌க் கொ‌ண்டு, தா‌ய்மா‌ர்க‌ளிட‌ம் ‌நிபுண‌ர் குழு கரு‌த்து கே‌ட்டது. குடி‌த‌ண்‌ணீ‌ர் அடியோடு த‌ங்க‌ள் பகு‌தி‌‌யி‌ல் கெ‌ட்டு‌ப் போ‌ய்‌வி‌ட்டது எ‌ன்று‌ம், ஓடைக‌ளி‌ல் த‌ண்‌ணீ‌ர் குடி‌க்கு‌ம் ஆடுக‌ள் தொட‌ர்‌ந்து உ‌யி‌ர் இழ‌ந்தன எனவு‌ம், தோ‌ல் நோ‌ய்க‌ளு‌ம், வேறு பல நோ‌ய்களு‌ம் த‌ங்களை‌ப் பா‌தி‌ப்பதையு‌ம், ‌விவசாய‌ம் அடியோடு பா‌தி‌க்க‌ப்ப‌ட்டு ‌வி‌ட்டதாகவு‌ம் கூ‌றினா‌ர்க‌ள்.

ஆலை‌க்கு ஆதரவாக‌ கரு‌த்து கூற வ‌ந்த‌வ‌ர்க‌ளிட‌மு‌ம் கரு‌த்துகளை கே‌ட்க வே‌‌ண்டு‌ம் எனவு‌ம் ‌நிபுண‌ர் குழு‌விட‌ம் நா‌ன் சொ‌ன்னே‌ன். ‌பி‌ன்ன‌ர் ‌‌நிபுண‌ர் குழு அ‌ங்கு செ‌ன்று கரு‌த்துகளை க‌ே‌ட்டது. பக‌ல் 12 ம‌ணியள‌வி‌ல் ‌ஸ்டெ‌‌ர்லை‌ட் ஆலை‌யி‌ல் ஆ‌ய்வு தொட‌ங்‌கி ‌பி‌ற்பக‌ல் 3.30 ம‌ணி‌ வரை‌யிலு‌ம் நடைபெ‌ற்றது. ‌நீரு‌ம், சேறு‌ம், ம‌ண்ணு‌ம் சோதனை‌க்காக மா‌தி‌ரி‌க் குடுவைக‌ளி‌ல் சே‌க‌ரி‌க்க‌ப்ப‌ட்டது. ஆ‌ய்வு 3வது நாளாக ஏ‌ப்ர‌ல் 8ஆ‌ம் தே‌தி அ‌ன்று‌ம் மு‌ற்பக‌லி‌ல் நடைபெ‌ற்றது. இ‌ந்த ஆ‌ய்‌வி‌ன்போது ஆ‌ய்‌வி‌ல் உ‌ள்ள குறைபாடுகளை எழு‌த்து மூலமாகவே ‌நிபுண‌ர் குழு‌வின‌ரிட‌‌ம் த‌ந்து உ‌‌ள்ளே‌ன். இ‌ந்த ஆ‌ய்‌வி‌ன்போது, இ‌ந்‌திய க‌ம்யூ‌னி‌ஸ்‌ட் க‌ட்‌சி‌யி‌ன் மாவ‌ட்ட செயல‌ர் மோக‌ன்ரா‌‌ஜ், மா‌ர்‌க்‌‌‌சி‌ஸ்‌ட் க‌ம்யூ‌னி‌ஸ்‌ட் க‌ட்ச‌ி‌யி‌ன் மாவ‌ட்ட செய‌லர் கனகரா‌ஜ் ஆ‌‌கியோரு‌ம் உட‌ன் இரு‌ந்தன‌ர்.

நா‌க்பூ‌ர் ‌நீ‌ரி ‌நிறுவன‌ம் 1998ஆ‌ம் ஆ‌ண்டு ஸ்டெ‌‌ர்லை‌ட் ஆலை சு‌ற்று‌ப்புற‌ச் சூழலு‌க்கு‌ம், ‌நில‌ம், ‌நீ‌ர், கா‌ற்று ம‌ண்டல‌த்‌தி‌ற்கு‌ம் பெரு‌ம் நாச‌ம் ‌விளை‌வி‌க்கு‌ம் எ‌ன்று ஆ‌ய்வு அ‌றி‌க்கை த‌ந்து இரு‌ந்தது. ‌நிலைகுலைய‌ர் நே‌ர்மையாள‌ர் டா‌க்ட‌ர் க‌ண்ணா ‌நிறுவ‌னத்‌தி‌ன் ஆணையராக இரு‌ந்தா‌ர். 1999ஆ‌ம் ஆ‌ண்டி‌‌ல் ‌நீ‌ரி ‌நிறுவன‌ம் ஸ்டெ‌‌ர்லை‌ட் ‌நி‌ர்வாக‌த்‌தி‌ற்கு வளை‌ந்து கொடு‌த்தது. 2003 ஆ‌‌ம் ஆ‌ண்டி‌ல் ஸ்டெ‌‌ர்லை‌ட் ‌நிறுவன‌த்‌திற‌்கு ஆதரவாக ஆ‌ய்வு அ‌றி‌க்கை த‌ந்து த‌‌ன் ந‌ம்பக‌த்த‌ன்மையை இழ‌ந்தது.

ஆனா‌ல், ‌மீ‌ண்டு‌ம் 2005‌‌ஆ‌ம் ஆ‌ண்டி‌ல் மு‌ன்பு கொடு‌த்த ஆ‌ய்வு ‌அ‌றி‌க்கை‌க்கு முர‌ண்ப‌ட்டு ஸ்டெ‌‌ர்லை‌ட் ஆலையா‌ல் சு‌ற்று‌ச்சூழ‌ல் மாசுபடு‌கிறது எ‌ன்ற கரு‌த்துகளையு‌ம் கூ‌றியது. இ‌ந்த‌ப் ‌பி‌ன்ன‌ணி‌‌யி‌ல்தா‌ன் த‌ற்பொழுது‌ம் ‌நீ‌‌ரி ‌நிறுவன‌ம் இ‌ந்த ஆ‌ய்வை மே‌ற்கொ‌ண்டு இரு‌க்‌கிறது. ஸ்டெ‌‌ர்லை‌ட் ஆலை மரா‌ட்டிய மா‌நில‌த்‌தி‌ல் ‌நிறுவ‌ப்ப‌ட்டு, பொதும‌க்க‌ள், ‌விவசா‌யிக‌ள் நட‌த்‌திய போரா‌ட்டதா‌ல் அ‌ந்த மா‌நில அரசு கொடு‌த்த லைசெ‌ன்சை ர‌த்து செ‌ய்தது.
1994ஆ‌‌‌ம் ஆ‌ண்டி‌ல் அ.இ.‌அ.தி.மு.க ஆ‌ட்‌சி‌யி‌‌ன்போது த‌மிழக அர‌சி‌ன் அனும‌தி பெ‌ற்று இ‌ந்த ஆலை தொட‌ங்க‌ப்ப‌ட்டது. போபா‌லி‌ல் ஏ‌ற்ப‌ட்ட ஆலை ‌விப‌த்தா‌ல் ந‌ச்சுவாயு பட‌ர்‌ந்து ம‌னித உ‌யி‌ர்க‌ள் ப‌லியானது போல, ஸ்டெ‌‌ர்லை‌ட் ஆலை‌யி‌ன் ந‌ச்சு‌த்த‌ன்மையா‌ல் கட‌ல்வா‌ழ் உ‌யி‌ரின‌ங்களு‌‌ம், ‌விவசாய ‌நில‌ங்களு‌ம் நாசமாகு‌ம். நோ‌ய்க‌ள் உ‌யி‌ர்களை அ‌ழி‌க்கு‌ம். இ‌ந்த ஆலை மூட‌ப்ப‌ட்டாலு‌ம் இத‌ன் ந‌ச்சு‌த்த‌ன்மை சு‌ற்று வ‌ட்டார‌த்‌திலு‌ம் பல ஆ‌ண்டுகளு‌க்கு ‌நீடி‌க்கவே செ‌ய்யு‌ம். அமெ‌ரி‌‌க்கா‌வி‌ல் ஒரு தா‌‌மிர ஆலை மூட‌ப்ப‌ட்டு நூறு ஆ‌ண்டுக‌ள் ஆ‌கியு‌‌‌ம் அ‌ந்த வ‌ட்டார‌த்‌தி‌ல் ந‌ச்சு‌த்த‌ன்மை ‌நீ‌ங்க‌வி‌ல்லை எ‌ன்பது ஒரு அபாய அ‌றி‌‌வி‌ப்பு ஆகு‌ம்.

இ‌‌ந்த ஸ்டெ‌‌ர்லை‌ட் ஆலை‌யி‌ன் ‌நிறுவன‌ர், உலக‌க் கோடீ‌ஸ்வர‌ர்க‌ளி‌ல் ஒருவரான அ‌னி‌ல் அக‌‌ர்வா‌ல், கோடி‌க்கண‌‌க்‌கி‌ல் கொ‌ள்ளையடி‌க்க ஒ‌ரிசா மா‌நில‌த்த‌ி‌ல் க‌னிம வள‌ங்களை‌க் கப‌ளீகர‌ம் செ‌ய்து அ‌ங்கு வாழு‌ம் பழ‌ங்குடி ம‌க்க‌ள் ஆயுத‌ம் ஏ‌ந்த‌ச் செ‌ய்து மாவோ‌யி‌ஸ்டுகளாக மாற‌க் காரணமானவ‌ர். பொதும‌க்க‌ள் நலனை‌ப் பாதுகா‌க்க, ஸ்டெ‌‌ர்லை‌ட் ந‌ச்சு ஆலையை அக‌ற்று‌ம் போரா‌ட்ட‌த்தை‌த் த‌ர்மயு‌த்தமாகவே ந‌ம்‌பி‌க்கையுட‌ன் தொட‌ர்வோ‌ம்," எ‌ன்று வைகோ கூ‌றியு‌ள்ளா‌ர்.

Thursday, April 7, 2011

ஸ்டெர்லைட்: 2ம் நாளாக வைகோ ஆய்வு


சென்னை, ஏப்.7,2011

தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் தொழிற்சாலையில் உச்சநீதிமன்ற உத்தரவுப்படி நீரி எனும் நிறுவனம் இன்று இரண்டாவது நாளாக ஆய்வு நடத்தியது.

இந்நிறுவனத்தின் நிபுணர் குழுவுடன் மதிமுக பொதுச்செயலர் வைகோவும் இணைந்து சுற்றுச்சூழல் கேடு குறித்து ஆய்வுசெய்தார். முன்னதாக, ஸ்டெர்லைட் தொழிற்சாலையால் சுற்றுச்சூழலுக்கு கேடு ஏற்படுவதால் அதை மூட வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் வைகோ வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் ஸ்டெர்லைட் ஆலையை மூடுமாறு உத்தரவிட்டது.

இதை எதிர்த்து ஸ்டெர்லைட் சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதுதொடர்பான விசாரணையின்போது ஆலையை முழுமையாக மூட வேண்டும் என வைகோ நேரில் ஆஜராகி வாதாடினார்.
இதையடுத்து, சுற்றுச்சூழலை மாசுபடுத்தும் ஸ்டெர்லைட் கழிவுகள் குறித்து நீரி என்னும் நிறுவனம் ஆய்வு நடத்தி 8 வாரத்துக்குள் அறிக்கை சமர்ப்பிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

அதன்படி நீரி நிறுவனம் சார்பில் இன்றும் நாளையும் ஸ்டெர்லைட் ஆலையில் ஆய்வு நடைபெறுகிறது. இந்த ஆய்வில் கலந்துகொள்ளுமாறு வைகோவுக்கும் நீரி நிறுவனம் அழைப்பு விடுத்திருந்தது.

இதை ஏற்று நீரி நிறுவன அதிகாரிகள் மற்றும் தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகளுடன் வைகோவும் சேர்ந்து ஸ்டெர்லைட் ஆலையில் நேற்றும் இன்றும் ஆய்வு நடத்தினார்.